ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

விடுமுறை எடுப்பது மிக மோசமான விஷயம்: சுமித்ரா மகாஜன்

மக்களவை உறுப்பினர்கள் அவ்வப்போது அவைக்கு வராமல் விடுப்பு எடுத்து வருவது மிக மோசமானது என்று சுமித்ரா மகாஜக் கருத்துக் கூறியுள்ளார்.

Updated On :9 மே 2016, 9:28 am

புது தில்லி : மக்களவை உறுப்பினர்கள் அவ்வப்போது அவைக்கு வராமல் விடுப்பு எடுத்து வருவது மிக மோசமானது என்று சுமித்ரா மகாஜக் கருத்துக் கூறியுள்ளார்.

மக்களவை இன்று காலை கூடியதும், கேள்வி நேரத்தின் போது, பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் குறித்து கேள்வி முன் வைக்கப்பட்டது. அப்போது கேள்விகளை முன் வைத்த பாஜக உறுப்பினர் நளின் குமார் கட்டீல் (கர்நாடகா), சிபிஐ-எம் கட்சி உறுப்பினர் ஸ்ரீமதி டீச்சர் (கேரளா) ஆகியோர் அவைக்கு வரவில்லை.

இதனைப் பார்த்த அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், உறுப்பினர்கள் அவையில் பங்கேற்காதது மிக மோசமான செயல் என்று கூறினார்.

5 மாநில தேர்தலையொட்டி, தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள், ஏப்ரல் 25ம் தேதி கூட்டம் தொடங்கியது முதல் அவையில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.