பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

கே.எல். ராகுல் 152*: தில்லி கேபிடல்ஸ் 264 ரன்கள் குவிப்பு!

நடப்பு சீசனில் அதிக ரன்களை குவித்த தில்லி கேபிடல்ஸ் அணியின் அதிரடியான பேட்டிங் குறித்து...

News image

கே.எல். ராகுல். - படம்: தில்லி கேபிடல்ஸ்

Updated On :25 ஏப்ரல் 2026, 5:31 pm IST

நடப்பு ஐபிஎல் சீசனில் 35ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்து 20 ஓவர்களில் 264/2 ரன்கள் குவித்தது. இந்த சீசனில் அதிக ரன்களை குவித்த அணியாக தில்லி கேபிடல்ஸ் சாதனை படைத்துள்ளது.

இந்தப் போட்டியில் தில்லி அணியின் தொடக்க வீரர் கே.எல். ராகுல் 67 பந்துகளில் 152* ரன்கள் குவித்து அசத்தினார். இதில் 16 பவுண்டரிகள் 9 சிக்ஸர்கள் அடித்தார்.

தில்லி அணி தனது சொந்த திடலில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. பதும் நிசாங்கா 11 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து கே.எல். ராகுல் - நிதீஷ் ராணா இணையினர் 220 ரன்கள் குவித்தார்கள்.

இந்தப் போட்டியில் நிதீஷ் ராணா 91 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுபுறத்தில் கே.எல். ராகுல் ருத்ரதாண்டவம் ஆடி 152 ரன்கள் குவித்தார். பஞ்சாப் அணி வீரர்களின் பந்துவீச்சை ராகுல் நான்கு பக்கமும் அடித்து நொறுக்கினார்.

பஞ்சாப் அணியின் சார்பில் அர்ஷ்தீப், பார்ட்லெட் தலா 1 விக்கெட் எடுத்தார்கள். சஹால் மட்டுமே 10.5 ரன்ரேட்டில் பந்துவீசினார். மற்றவர்கள் எல்லாம் 11, 12, 16 என ரன் ரேட்டில் பந்துவீசி அதிர்ச்சி அளித்தார்கள்.

Summary

K.L. Rahul 152: Delhi Capitals sets a target of 265 runs for Punjab Kings

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.