சண்டிகர்: ஹரியானவுடனான நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்து பஞ்சாப் சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தை உச்ச நீதிமன்றம் இன்று ரத்து செய்ததால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இன்று கூண்டோடு ராஜினாமா செய்தனர்.
பஞ்சாபில் நடைமுறையில் உள்ள சட்லெஜ்-யமுனா இணைப்பு கால்வாய் திட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யும் வகையில் 2004-ஆம் ஆண்டு பஞ்சாப் சட்டமன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. இதனால் அண்டை மாநிலமான ஹரியானா கடுமையிலாக பாதிக்கப்பட்டது. இதற்கு எதிராக உச்ச நீதியமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பஞ்சாப் மாநில அரசின் நடவடிக்கை அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று கூறி அந்த சட்டத்தை தள்ளுபடி செய்வதாக இன்று அறிவித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமா செய்து கடிதத்தை, சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இவர்களோடு முன்னாள் முதல்வரும், தற்போதைய மக்களவை உறுப்பினருமான, பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அம்ரித் சிங்கும் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்து, ராஜினாமா கடிதத்தை மக்களவை சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளார். சபாநாயகர் இதுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாளை. அருகே பைக் திருடியவா் கைது

நெல்லை-சென்னை மெமு ரயிலுக்கு பயணிகளிடையே வரவேற்பு

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


