பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் நாளை முதியவர்கள் மட்டுமே மாற்றிக் கொள்ள இயலும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பைத் தொடர்ந்து, பொதுமக்கள் தங்கள் கைவசமுள்ள பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றி வருகின்றனர்.
அது குறித்தது முக்கிய அறிவிப்பு ஓன்று தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வங்கிகளில் நாளை முதியவர்கள் மட்டுமே பணம் எடுக்கலாம் என்றும், வங்கிகளின் வேலைநேரத்தில் மட்டுமே பணம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.