இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

மலப்புரம் மாவோயிஸ்ட் என்கவுன்ட்டர் விவகாரம்: நீதி விசாரணைக்கு கேரள முதல்வர் உத்தரவு!

கேரள  மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் காட்டுப்பகுதியில் கடந்த 24-ம் தேதியன்று போலீசாருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் இரண்டு மாவோயிஸ்டுகள் பலியான விவகாரத்தில் நீதி விசாரணைக்கு... 

News image
Updated On :27 நவம்பர் 2016, 7:18 am

DIN

திருவனந்தபுரம்: கேரள  மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் காட்டுப்பகுதியில் கடந்த 24-ம் தேதியன்று போலீசாருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் இரண்டு மாவோயிஸ்டுகள் பலியான விவகாரத்தில் நீதி விசாரணைக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் இன்று உத்தரவிட்டுள்ளார்.

கேரளாவில் மாவோயிஸ்டு தீவிரவாதிகளின் அட்டகாசம் சமீபகாலமாக அதிகரித்து உள்ளது. மேலும் அவர்கள் தொடர் தாக்குதல்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் கடந்த 24-ம் தேதியன்று மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் காட்டுப்பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் மாவோயிஸ்ட் இயக்கத்தை ஷங்கர் என்னும் தேவராஜ் மற்றும் காவேரி என்னும் அனிதா ஆகிய இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் போலீசாரின் போலி என்கவுன்ட்டராக நடத்தப்பட்ட தாக்குதலில் அவர்கள் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. காவல்துறை மீது குற்றம்சாட்டிய மனித உரிமை ஆர்வலர்கள் இவ்விவகாரத்தில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

அதன்படி மாநில குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணைக்கு கேரள போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெஹெரா நேற்று உத்தரவிட்டிருந்தார்.  இந்நிலையில், நிலம்பூர் என்கவுன்ட்டர் விவகாரம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு கேரள முதல்வர்  பினராயி விஜயன் இன்று உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.