ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

காஷ்மீரில் கடும் துப்பாக்கிச்சண்டை: ஒரு வீரர், 2 பயங்கரவாதிகள் பலி

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.

News image
Updated On :2 அக்டோபர் 2016, 10:46 pm

DIN

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒரு வீரரும், 2 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
பாராமுல்லாவின் புறநகர்ப்பகுதியான ஜபான்ஸ்போரா பகுதியில் உள்ள ராணுவத்தின் 46ஆவது ராஷ்ட்ரீய ரைஃபிள்ஸ் படைப்பிரிவு முகாம் மீது 6 பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென்று துப்பாக்கியால் சுட்டனர். அவர்கள் கையெறி குண்டுகளையும் வீசினர். இதையடுத்து முகாமில் இருந்த வீரர்கள் திருப்பிச் சுட்டனர். அவர்களுக்குத் துணையாக எல்லைப் பாதுகாப்புப் படையினரும் பயங்கரவாதிகளை நோக்கிச் சுட்டனர். இரு தரப்புக்கும் இடையே சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேல் கடும் துப்பாக்கிச் சண்டை நீடித்தது. இதில் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒரு வீரரும், 2 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்ற பயங்கரவாதிகள் தப்பியோடி விட்டதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, இத்தாக்குதலில் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 2 வீரர்கள் காயமடைந்தனர்.
முன்னதாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் கடந்த புதன்கிழமை அதிரடித் தாக்குதல் நடத்தியது. அதைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைப்புகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று உளவு அமைப்புகள் எச்சரித்திருந்தன. இந்நிலையில், தற்போது ராணுவ முகாம் மீது தாக்குல் நடத்தப்பட்டுள்ளது. காஷ்மீரின் உரி பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய இரு வாரங்களுக்குப் பிறகு இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.