

புது தில்லி : பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு, காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ராகுல் காந்தி தான் அயோத்தி மண்ணில் முதல் முறையாக இன்று காலடி எடுத்து வைத்துள்ளார்.
1992ம் ஆண்டு அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அங்கு செல்வது இதுவே முதல் முறையாகும்.
1990ம் ஆண்டு நேரு-காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் என்ற அடிப்படையில் ராஜீவ் காந்தி அயோத்திக்குச் சென்றார். அவருக்குப் பிறகு, அதுவும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு வேறு யாருமே அயோத்திக்குச் செல்லவில்லை.
அயோத்திக்கு மிக அருகே உள்ள ஃபைஸாபாத்தில் பேரணி நடத்திய சோனியாவும், அயோத்தி செல்லவில்லை. பல முறை அயோத்திக்குச் சென்று பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்ட வருண் காந்தி பல காரணங்களால் அதனை தவிர்த்துவிட்டார்.
இந்த நிலையில், அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் இருந்து வெறும் 1கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஹனுமான்கர்ஹி கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார் ராகுல். இந்த பயணம் சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.