ஜெய்ப்பூர்: இந்திய விமானப் படைக்கு சொந்தமான போர் விமானம், ராஜஸ்தான் மாநிலம் பார்மெர் மாவட்டத்தில் விபத்துக்குள்ளானது.
அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் இல்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
உத்தர்லை விமானப் படைத் தளத்தில் விமானம் விபத்துக்குள்ளானதாகவும், மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுவதாகவும் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன்பே, விமானி விமானத்தில் இருந்து குதித்து உயிர் தப்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.