புது தில்லி: வன்முறை சம்பவங்கள், நாட்டின் பொதுச் சொத்துக்கு சேதம் விளைவிப்பதோடு மட்டும் அல்லாமல் சாமான்ய மக்களை பெரிதும் பாதிக்கும் என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வேதனை தெரிவித்துள்ளார்.
புது தில்லியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், காவிரி விவகாரம், தமிழகம் - கர்நாடக மாநிலங்களின் அமைதியை சீர்குலைத்துள்ளது. வன்முறையை எப்போதும் எந்த வடிவிலும் ஏற்க முடியாது.
வன்முறைச் சம்பவங்களால் பொது சொத்துக்கு சேதம் ஏற்படுவதோடு, சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு, சாமான்ய மக்களை பெரிதும் பாதிக்கிறது.
இரு மாநிலங்களின் நிலையையும் நன்கு ஆராய்ந்தே உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பினை அளித்துள்ளது. தீர்ப்பினை எதிர்த்து மாநில தலைவர்கள்தான் நீதிமன்றத்தை நாட வேண்டும்.
அமைதியை சீர்குலைக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் இரு மாநில மக்களும் உடனடியாக நிறுத்த வேண்டும். ஊடகங்களும் இது குறித்த செய்திகளை வெளியிடும் போது கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். ஒரு வகையில் வன்முறைச் சம்பவங்களை பெரிதுபடுத்தி செய்தி வெளியிடுவதும் வன்முறையைத் தூண்டுவதற்கு ஒப்பானதே என்றும் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லாரி மோதி கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

ரயில் முன் பாய்ந்து சலூன் கடைக்காரா் தற்கொலை

காா் மோதியதில் பெண் உயிரிழப்பு

ஐ.நா. தலைவருடன் இந்திய வெளியுறவு அதிகாரி சந்திப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


