12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

அழைப்பு விபரங்களை விளம்பரதாரர்களுடன் பகிர்ந்து கொள்கிறதா ரிலையன்ஸ் ஜியோ ? வெடிக்கும்  சர்ச்சை!

தங்களது வாடிக்கையாளர்களின் அழைப்பு விபரங்களை தனியார் விளம்பரதாரர்களுடன் ரிலையன்ஸின் ஜியோ பகிர்ந்து கொள்வதாக அதிர்ச்சி குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Published On :

தங்களது வாடிக்கையாளர்களின் அழைப்பு விபரங்களை தனியார் விளம்பரதாரர்களுடன் ரிலையன்ஸின் ஜியோ பகிர்ந்து கொள்வதாக அதிர்ச்சி குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தியாவின் புகழ்பெற்ற கணினி தகவல் திருட்டு குழுக்களில் ஒன்றான 'அனானிமஸ் இந்தியா' தங்களது வலைப்பூ பதிவு ஒன்றில் இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி ரிலையன்ஸ் ஜியோ  செயலியானது, தங்களது வாடிக்கையாளர்களின் அழைப்பு விபரங்களை அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரில் அமைந்திருக்கும் சர்வர்களுக்கு அனுப்பி வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டும் இல்லாமல் 'மேட் -மீ ' என்ற விளம்பரதாரர் ஒருவருடனும் இந்த தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுவதாகவும் அந்த வலைப்பூ தெரிவிக்கிறது.

இதே குழுவின் வலைப்பூவின் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ;பதிவு ஒன்றில் ரிலையன்ஸ் ஜியோ  தகவல் பரிமாற்ற  செயலியில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.அதன்மூலம் சங்கேத மொழியில் தகவல்கள் பாதுகாக்கப்படாததால்  எளிதில் திருடு போக வாய்ப்பிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.