மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

எம்.பிக்கள் வேறு தொழில் செய்வதற்கு தடை: மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!

பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பணியன்றி வேறு ஒரு தொழில் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ..

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:11 pm

DIN

புதுதில்லி: பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பணியன்றி வேறு ஒரு தொழில் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பணியன்றி வேறு ஒரு தொழில் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி பாஜகவின் செய்தித்தொடர்பாளரும், வழக்கறிஞருமான அஷ்வினி குமார் உபாத்யாய் மனு ஒன்றினை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த மனுவானது தலைமை நீதிபதி ஜே எஸ் கேஹர், நீதிபதி டி ஒய் சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதிகளும், பொது ஊழியர்களும் எப்படி வேறொரு தொழில் செய்ய இயலாது என்று முறை உள்ளதோ, அது போலவே சட்டத்தை வகுக்கும் எம்.பிக்களும் வேறொரு தொழிலை செய்யக்கூடாது என்று அஷ்வினி குமார் வாதிட்டார்.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சமமான சட்டத்திற்கு உட்பட்டவர்களாக வேறொரு தொழில் செய்வதிலிருந்து விலக்கப்பட வேண்டும். ஏனெனில் அவர்கள் மக்கள்  பணிக்காக தங்களை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்..

பின்னர் நீதிபதிகள், “மனுதாரர் சொல்வது செல்லத்தக்கது என்றாலும் நீதிமன்றம் இது தொடர்பாக கொள்கைகளை வகுக்க முடியாது. மருத்துவர்களாக இருப்பவர்கள் ஐ ஏ எஸ் அதிகாரியாக ஆக முடியும், பொறியாளர்கள் அயல்நாட்டு தூதுவர்களாக முடியும். இவ்வளவு ஏன் மனுதாரரே ஒரு அரசியல் கட்சி உறுப்பினராகத்தான் உள்ளார். எனவே அரசியலமைப்பு சட்டம் 32 இன் படி நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் இந்த விவகாரம் அடங்காது என்பதால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று தீர்ப்பளித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.