மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

விவசாயக்கடன் தள்ளுபடி: உத்தரப்பிரதேச முதல்வருக்கு ராகுல் காந்தி பாராட்டு! 

உத்தரப்பிரதேசத்தில் விவசாயக் கடன் தள்ளுபடி என்பது சரியான திசையில் எடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு முடிவாகும் என்று ...

News image
Updated On :5 ஏப்ரல் 2017, 6:57 am

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் விவசாயக் கடன் தள்ளுபடி என்பது சரியான திசையில் எடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு முடிவாகும் என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பாராட்டியுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகள் பெற்ற விவசாயக் கடனான ரூ.36,359 கோடியை தள்ளுபடி செய்து, நேற்று நடைபெற்ற உத்தரப்பிரதேச அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதுகுறித்து காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

இந்த கடன் தள்ளுபடியானது விவசாயிகளுக்கு பகுதி அளவிலான நிம்மதி என்றாலும் சரியான திசையில் எடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு அடியாகும். விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி என்பதை காங்கிரஸ் எப்பொழுதும் வரவேற்றே வந்திருக்கிறது.

மத்திய அரசை பொறுத்த வரை அவர்களுக்கு வறட்சியில் வாடும் விவசாயிகளின் துயரை தீர்க்கவேண்டிய தேசிய அளவிலான கடமை உள்ளது. அதை விடுத்து மாநிலங்ககுக்கு இடையே பாரபட்சம் காட்டும் அரசியல் விளையாட்டுகளில் அவர்கள் ஈடுபடக் கூடாது. 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.