பனிப்பொழிவு: ஸ்ரீநகரில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஏப்ரல் 10-ஆம் தேதி வரை விடுமுறை
பனிப்பொழிவு காரமணாக ஸ்ரீநகரில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஏப்ரல் 10-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


பனிப்பொழிவு காரமணாக ஸ்ரீநகரில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஏப்ரல் 10-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீரில், கடந்த சில நாள்களாக பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. வீடுகள், பூங்காக்கள் பேருந்து நிலையங்கள் என அனைத்து இடங்களிலும் பனி உறைந்துள்ளதால் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது. கடும் பனிப்பொழிவு மற்றும் நிலச்சரிவு காரணமாக ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை தொடர்ந்து இன்று 2-வது நாளாக மூடப்பட்டுள்ளது. இதனால், நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆங்காங்கே சாலைகளில் நிறுத்தப்பட்டன.
மேலும் ஸ்ரீநகர், பாராமுல்லா பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஏப்ரல் 10-ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மிரில் நிலவும் கடும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...