ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தயவு செய்து கழிப்பறை கட்டுங்க: பயனாளிகள் காலில் விழுந்து கேட்டுக்கொண்ட நகராட்சி ஆணையர்!

ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து கழிப்பறை கட்டுங்க என்று பயனாளிகள் காலில் விழுந்து நகராட்சி ஆணையர் கேட்டுக்கொண்ட சம்பவம் மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

News image
Updated On :12 ஏப்ரல் 2017, 11:09 am

DIN

உழவர்கரை(புதுச்சேரி): ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து கழிப்பறை கட்டுங்க என்று பயனாளிகள் காலில் விழுந்து நகராட்சி ஆணையர் கேட்டுக்கொண்ட சம்பவம் மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ளது உழவர்கரை நகராட்சி. இங்கு பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்த 'தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் கழிப்பறை கட்டுவதற்கு பயனாளிகள் சிலருக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களில் சிலர் இன்னும் கழிப்பறையை கட்டவில்லை.  

இதன் காரணமாக அவர்களுக்கு வித்தியாசமான முறையில் விழிப்புணர்வை உண்டாக்க நகராட்சி ஆணையர் ரமேஷ் முடிவெடுத்தார். அதன்படி இன்று பிற நகராட்சி ஊழியர்களுடன் சம்பந்தப்பட்ட பயனாளிகளின் வீட்டிற்கு ரமேஷ் சென்றார்.

அங்கு இருந்த பயனாளிகளின் காலில் விழுந்து உடனடியாக அவர்கள் கழிப்பறையை கட்ட வேண்டும் என்று ரமேஷ் கேட்டுக்கொண்டார். அவருடன் நகராட்சி ஊழியர்களும் காலில் விழுந்து வேண்டிக் கொண்டனர்.

திட்டத்தினை செயல்பட வைப்பதற்காக நகராட்சி ஆணையர் காலில் விழுந்த சம்பவம் பொது மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.