இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

11 லட்சத்துக்கும் மேலான போலி பான் எண்கள் ரத்து: மத்திய இணையமைச்சர் தகவல்

ஜூலை 27-ந் தேதி கணக்கீட்டின்படி 11 லட்சத்துக்கும் மேலான பான் எண்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்க்வார், புதன்கிழமை தெரிவித்தார்.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2017, 3:47 pm

DIN

இதுவரையில் 11 லட்சத்துக்கும் மேலான போலி பான் எண்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்க்வார், மாநிலங்களவையின் கேள்வி நேரத்தின் போது பதிலளித்துப் பேசினார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது:

ஒரே நபருக்கு பல பான் எண்கள் வழங்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. ஒருவருக்கு ஒரு நிரந்தர வைப்பு கணக்கு எண் வழங்கப்பட வேண்டும் என்பதே விதி. இந்த விதிமீறப்பட்டுள்ளது. எனவே போலி பான் எண்களை தேடும் பணி உடனடியாக நடைபெற்றது. 

தற்சமயம் ஜூலை 27-ந் தேதி வரை 11 லட்சத்து 44 ஆயிரத்து 211 போலி பான் எண்கள் கண்டறியப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளன. 

அதுபோல ஆளில்லாதவர்களின் பெயரில் இதுவரை 1,566 போலி பான் எண்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இவைகள் போலி பெயர் மற்றும் அடையாளச் சான்று கொடுத்து பெறப்பட்டுள்ளது தெரிய வந்தது. இந்த போலி பான் எண்கள் 2004 முதல் 2007 வரை வழங்கப்பட்டதாகும் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.