பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

உத்திரப்பிரதேசத்தில் வங்கதேச தீவிரவாதி கைது

வங்கதேச தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அப்துல்லா, உத்திரப்பிரதேசத்தின் முஸாஃபர் நகரில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டான்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2017, 6:14 am

DIN

வங்கதேசத்தைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பான அன்சருல்லா பாங்க்லா குழுவைச் சேர்ந்த அப்துல்லா இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலத்தின் முஸாஃபர் நகரில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டான்.

2011-ம் ஆண்டு முதல் சஹாரன்பூரில் வசித்து வந்த அப்துல்லா, கடந்த ஒரு மாதமாக முஸாஃபர் நகரில் தங்கியுள்ளான். இங்கிருந்து பல்வேறு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளான். குறிப்பாக   இதர தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது, போலி அடையாளங்களை உருவாக்குவது போன்ற செயல்களைச் செய்துள்ளான்.

வங்கதேசத்தைச் சேர்ந்த பல்வேறு தீவிரவாதிகளுக்கு போலி அடையாள அட்டை, பாஸ்போர்ட் உள்ளிட்டவைகளை அளித்து இந்தியாவில் பாதுகாப்புடன் இருப்பதற்கும் ஏற்பாடுகளைச் செய்து வந்துள்ளான்.

இதன்மூலம் தீவிரவாதச் செயல்களுக்கு எந்த விதத்திலும் சிக்கல் ஏற்படாமல் இருக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், அப்துல்லாவுடன் மேலும் 3 பேரைப் பிடித்து உத்திரப்பிரதேச தீவிரவாத தடுப்புப் படை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

அதுமட்டுமல்லாமல், சஹாரன்பூர், முஸாஃபர் நகர் மற்றும் ஷாமிலி நகர காவலர்களுடன் இணைந்து அந்த மாவடங்களில் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.