திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

கனமழை: கொச்சி செல்ல வேண்டிய விமானம் சென்னையில் தரையிறக்கம்

சவுதி அரேபியாவில் இருந்து கொச்சிக்கு வந்து கொண்டிருந்த சவுதி ஏர்லைன்ஸ் விமானம் கொச்சியில் பெய்து வரும் கன மழை காரணமாக, சென்னையில் தரையிறக்கப்பட்டது.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2017, 11:09 am IST


சென்னை: சவுதி அரேபியாவில் இருந்து கொச்சிக்கு வந்து கொண்டிருந்த சவுதி ஏர்லைன்ஸ் விமானம் கொச்சியில் பெய்து வரும் கன மழை காரணமாக, சென்னையில் தரையிறக்கப்பட்டது.

கேரளாவில் கொச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் சவுதி அரேபியாவில் இருந்து கொச்சி நோக்கி வந்த சவுதி ஏர்லைன்ஸ் விமானம், அப்பகுதியில் கன மழை பெய்ததால் கொச்சி விமான நிலையத்தில் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது. 

உடனடியாக சவுதி ஏர்லைன்ஸ் விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. அந்த விமானத்தில் வந்த 290 பேர் 10 மணி நேரத்துக்கும் மேலாக சென்னை விமான நிலையத்தில் காத்திருக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.