சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நடப்பு ஆண்டில் வருமான வரி தாக்கல் செய்வோர் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரிப்பு 

நடப்பு ஆண்டில் வருமான வரி தாக்கல் செய்வோர் எண்ணிக்கை 25 சதவீதம் கூடுதலாக அதிகரித்துள்ளதாக திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2017, 3:20 pm

DIN

வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை நடப்பு ஆண்டில் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது:

2015-16-ம் நிதி ஆண்டில் வருமான வரி தாக்கல் செய்தோர் எண்ணிக்கை 2,26,97,843 ஆகும். அதன் வளர்ச்சி 24.7 சதவீதம் ஆகும். 

ஆனால், 2016-17-ம் நிதி ஆண்டில் ஆகஸ்ட் 5-ம் தேதி வரையில் வருமான வரி தாக்கல் செய்தோர் எண்ணிக்கை 2,82,92,955 ஆக அதிகரித்துள்ளது. 

மொத்தம் 25.3 சதவீதம் கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது. இதன்மூலம் நடப்பு ஆண்டில் வருமான வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை 9.9 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் முன்கூட்டியே வருமான வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கையும் 41.79 சதவீதம் அதிகரித்துள்ளது. அதுபோல தானாக முன்வந்து வருமான கணக்கை தாக்கல் செய்வோர் எண்ணிக்கையும் 34.25 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு பண ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500, மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதனால் கறுப்பு பண பதுக்கலை ஒழிக்க வகை செய்யப்பட்டது என்றிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.