தில்லியில் இரண்டு விமானங்கள் மோதல்: 196 பயணிகள் பத்திரமாக மீட்பு
தில்லி விமானநிலையத்தில் நின்றுகொண்டிருந்த விமானத்தின் மீது மற்றொரு விமானம் மோதி விபத்துக்குள்ளானது.


தில்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் அதற்காக அனுமதிக்கப்பட்ட பே-86 என்ற தடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அதன் அருகிலேயே பே-87 தடத்தில் எத்தியோபியன் ஏர்லைன்ஸ் விமானமும் நின்றிருந்தது.
இந்நிலையில், புதன்கிழமை மதியம் 2.20 மணியளவில் எத்தியோபியன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்படத் தயாரானது. அப்போது அந்த விமானத்தை நகர்த்தும் போது அதன் அருகிலிருந்த ஏர் இந்தியா விமானத்தின் மீது மோதியது.
அதிர்ஷ்டவசமாக இரண்டு விமானங்களின் இறகுகள் மட்டும் ஒன்றோடு ஒன்று மோதியது. மற்றபடி பெரிய அளவில் விபத்து எதுவும் ஏற்படவில்லை. இந்த இரண்டு விமானங்களின் என்ஜின்களும் அருகில் இருந்த நிலையில், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
பின்னர் டிராக்டர் மூலம் இரண்டு விமானங்களும் பிரிக்கப்பட்டு எத்தியோபியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்த 196 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
விமான நிலையத்திலேயே இதுபோன்று அதிர்ச்சிகர விபத்து நடத்தது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...