திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

இந்திய முஸ்லிம்களிடையே பாதுகாப்பற்ற உணர்வு: அன்சாரியின் கருத்துக்கு பாஜக கண்டனம்

இந்திய முஸ்லிம்களிடையே பாதுகாப்பற்ற உணர்வு நிலவி வருவதாக குடியரசு துணைத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் ஹமீது அன்சாரி கூறியுள்ளதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:38 pm

DIN

இந்திய முஸ்லிம்களிடையே பாதுகாப்பற்ற உணர்வு நிலவி வருவதாக குடியரசு துணைத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் ஹமீது அன்சாரி கூறியுள்ளதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாஜக பொதுச் செயலர் கைலாஷ் விஜயவர்கியா வியாழக்கிழமை கூறியதாவது:
இந்தியாவில் முஸ்லிம்களிடையே பாதுகாப்பற்ற உணர்வு நிலவுகிறது என்று ஹமீது அன்சாரி கூறியுள்ளார்.
குடியரசுத் துணைத் தலைவர் பதவியிலிருக்கும் ஒருவர் இதுபோன்ற மலிவான கருத்தைக் கூறுவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவரது அந்தக் கருத்தை கண்டிக்கிறோம். ஓய்வுக்குப் பிறகு அரசியல் அடைக்கலம் தேடும் வகையில் அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
ஓய்வு பெறவிருக்கும் நிலைமையில் இந்தக் கருத்தைத் தெரிவித்திருந்தாலும், அவர் இதுவரை மாண்புக்குரிய குடியரசுத் துணைத் தலைவர் பதவியில்தான் இருக்கிறார் என்பதை மறந்திருக்கக் கூடாது என்றார் கைலாஷ் விஜயவர்கியா.
குடியரசுத் துணைத் தலைவராக ஐந்து ஆண்டுகள் இருந்த ஹமீது அன்சாரியின் பதவிக் காலம் வியாழக்கிழமையுடன் (ஆக. 10) நிறைவுற்றது. இந்த நிலையில், புதன்கிழமை அவர் கூறுகையில், இந்தியாவில் முஸ்லிம்களுடனான இணக்கச் சூழல் தற்போது அச்சுறுத்தலில் இருப்பதாகவும், இந்திய முஸ்லிம்களிடையே பாதுகாப்பற்ற உணர்வு நிலவி வருவதாகவும் கூறியிருந்தார்.
பாஜக ஆட்சியில் பசுப் பாதுகாவலர்களால் முஸ்லிம்கள் அடித்துக் கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் சூழலில் ஹமீது அன்சாரி இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.