டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

நடிகை பாவனா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து: எம்எல்ஏவுக்கு கேரள பேரவைத் தலைவர் எச்சரிக்கை

மலையாள நடிகை பாவனா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை சுயேச்சை எம்எல்ஏ பி.சி.ஜார்ஜ் தொடர்ந்து தெரிவித்து வந்தால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள மாநில சட்டப்

News image
Updated On :17 ஆகஸ்ட் 2017, 7:48 pm

DIN

மலையாள நடிகை பாவனா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை சுயேச்சை எம்எல்ஏ பி.சி.ஜார்ஜ் தொடர்ந்து தெரிவித்து வந்தால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள மாநில சட்டப் பேரவைத் தலைவர் ஸ்ரீராமகிருஷ்ணன் எச்சரித்தார்.
மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்த பாவனாவை கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி மர்ம நபர்கள் சிலர் கடத்திச் சென்று காரில் பாலியல் துன்புறுத்தல் செய்தனர். பின்னர், அந்த நபர்கள் தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து பாவனா அளித்த புகாரின் அடிப்படையில் பல்சர் சுனில் என்பவர் உள்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் பிரபல நடிகர் திலீபும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பாவனா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை ஜார்ஜ் தெரிவித்ததாகப் புகார் எழுந்துள்ளது.
ஜார்ஜுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு பாவனா கடிதம் ஒன்றையும் அனுப்பியிருக்கிறார்.
இந்தச் சூழலில் முகநூலில் ஸ்ரீராமகிருஷ்ணன் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
எம்எல்ஏ ஜார்ஜின் கருத்து மனிதத்தன்மையற்றதாகும். அந்த நடிகைக்கு எதிராக இதுபோன்ற கருத்துகளை அவர் தொடர்ந்து தெரிவித்து வந்தால் சட்டப் பேரவைத் தலைவர் என்ற முறையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சமூகத்தில் உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் அதுபோன்ற செயல்களை நியாயப்படுத்தும் வகையில் கருத்து தெரிவிக்கக் கூடாது. அது குற்றம் செய்பவர்களுக்கு ஊக்கமளிப்பது போல் ஆகிவிடும்.
நடிகை கடத்தல் வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று அந்தப் பதிவில் ஸ்ரீராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஜார்ஜுக்கு எதிராக வழக்கு: முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து எம்எல்ஏ ஜார்ஜுக்கு எதிராக கேரள மகளிர் ஆணையம் கடந்த திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.