இதைத்தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து, இந்த விவகாரம் தொடர்பாக தொடுக்கப்பட்ட 7 மனுக்களை விசாரிக்கத் தொடங்கியது. சீக்கிய மதத்தைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த நீதிபதி குரியன் ஜோசப், பார்சி மதத்தைச் சேர்ந்த நீதிபதி ஆர்.எஃப். நாரிமன், ஹிந்து மதத்தைச் சேர்ந்த யு.யு. லலித், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த நீதிபதி எஸ். அப்துல் நாஸர் ஆகியோர் கொண்ட அரசியல் சாசன அமர்வு, இந்த வழக்கை விடுமுறை காலத்திலும் தொடர்ந்து 6 நாள்கள் விசாரித்தது. இதையடுத்து, வழக்கின் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் கடந்த மே மாதம் 18-ஆம் தேதி ஒத்தி வைத்திருந்தது.