மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சிறையில் இருந்து சசிகலா ஓசூர் எம்எல்ஏ இல்லத்துக்குச் சென்று வந்துள்ளார்: ரூபாவின் அடுத்தக் குற்றச்சாட்டு

பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் இருந்து, அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலர் வி.கே. சசிகலா, அருகில் உள்ள ஓசூர் எம்எல்ஏவின் இல்லத்துக்குச் சென்று வந்துள்ளார் என அடுத்தக் குற்றச்சாட்டு கிளம்பிய

News image
Updated On :23 ஆகஸ்ட் 2017, 7:16 am

DIN


பெங்களூர்: பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் இருந்து, அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலர் வி.கே. சசிகலா, அருகில் உள்ள ஓசூர் எம்எல்ஏவின் இல்லத்துக்குச் சென்று வந்துள்ளார் என அடுத்தக் குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.

கர்நாடக மாநில காவல்துறை துணை ஆய்வாளர் டி. ரூபா, அம்மாநில ஊழல் தடுப்பு வாரியத்திடம் அளித்துள்ள அறிக்கையில் இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

அதாவது, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வி.கே. சசிகலா, சிறைக்கு அருகில் உள்ள ஓசூர் எம்எல்ஏவின் இல்லத்துக்குச் சென்று வந்திருப்பது குறித்து உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மத்திய சிறைச்சாலையின் முக்கிய நுழைவாயிலிலும், கேட் ஒன்று மற்றும் கேட் இரண்டிலும் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளே இதனை உறுதிபடுத்துகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
 

YouTube video thumbnail

பெங்களூர் சிறைச்சாலையின் முன்னாள் டிஐஜியாக இருந்த ரூபா, சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வி.கே. சசிகலாவுக்கு, சட்டவிதிகளை மீறி சலுகைகள் அளிக்கப்படுவதாக முதன் முதலாக குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், ரூபா அளித்துள்ள அறிக்கையில், சட்டத்துக்குப் புறம்பாக சிறையில், கைதி ஒருவருக்கு சலுகைகள் வழங்கிய விவகாரத்தில் துறைத் துறை அதிகாரிகள் மாநில உள்துறை மற்றும் செயலருக்கு தவறான தகவல்களை அளித்து வருகின்றனர் என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையின் முக்கிய நுழைவாயில் வழியாக சாதாரண ஆடையில் சசிகலாவும், இளவரசியும் சிறைக்குள் வரும் காட்சிகள் அடங்கிய பதிவு சமூக தளங்களில் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.