இந்தியா, சீனா மற்றும் பூடான் ஆகிய நாடுகளுக்கு இடையில் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சிக்கிம் மாநில எல்லையான டோக்லாம் பகுதியில் சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடியது.
இதனால், அப்பகுதியில் இந்தியாவும், சீனாவும் தங்கள் நாட்டுப் படைகளை நிலை நிறுத்தியது. இந்த விவகாரத்தால் இருநாடுகளிடையே கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பிரச்னை நீடித்து வந்தது.
இதையடுத்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ ஆகியோருக்கு இடையில் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் இருநாடுகளின் படைகளும் திரும்பப் பெறப்பட்டன.
இந்நிலையில், இருநாடுகளின் எல்லை குறித்து விவாதிக்க 20-ஆவது வருடாந்திர கூட்டம் வெள்ளிக்கிழமை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் இந்திய தரப்பில் வெளியுறவுத்துறை ஆலோசகர் அஜித் டோவல் மற்றும் குழுவினருடன் சீனாவைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் உறுப்பினரும், மாநில ஆலோசகருமான யாங் ஜேய்சிய் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
முன்னதாக, 2016-ம் ஆண்டு பெய்ஜிங்கில் கடந்த முறைக்கான வருடாந்திர கூட்டம் நடைபெற்றது. கடந்த 1962-ம் ஆண்டு முதல் இந்தியா, சீனா இடையே எல்லைப் பிரச்னை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!

தன்னை இயேசுவாக சித்திரிக்கும் படத்தை வெளியிட்ட டிரம்ப்!!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை: வைகோ

தங்கம், வெள்ளி விலை குறைவு: இன்றைய நிலவரம்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


