ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்தி
/

ஆணுறை விளம்பரங்களுக்கு செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அனுமதி

ஆபாசமின்றி எடுக்கப்படும் ஆணுறை விளம்பரங்களை பகல் நேரங்களில் ஒளிபரப்ப செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சகம் வியாழக்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:55 pm IST

தொலைக்காட்சிகளில் ஆணுறை விளம்பரங்களை காலை 6 முதல் இரவு 10 மணி வரை ஒளிபரப்ப மத்திய செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சகம் டிசம்பர் 11-ந் தேதி தடை விதித்தது. 

சில தொலைக்காட்சி சேனல்களில் பகல் நேரங்களில் ஒளிபரப்பப்படும் ஆணுறை விளம்பரங்கள் சிறுவர்களின் மனநிலையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே விளம்பரச் சட்ட விதி 1994-ன் படி இதற்கு தடை விதித்து உத்தரவிட்டதாக தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கின் அடிப்படையில் மத்திய செய்தி ஒளிபரப்புத்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகங்களிடம் விளக்கம் கேட்டு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில், ஆபாசமில்லாத ஆணுறை விளம்பரங்களை பகல் நேரங்களில் ஒளிபரப்ப செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வியாபார நோக்கங்களுக்காக ஆபாசமான காட்சிகள் இன்றியும், பெண்களை தவறான முறையில் சித்தரிக்காமலும் எடுக்கப்படும் ஆணுறை விளம்பரங்களை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஒளிபரப்ப அனுமதி வழங்கப்படுகிறது. அதில், அணுறை தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த விளம்பரங்கள் இருக்க வேண்டும் என்றிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.