டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

 உணவு குறித்து புகார் கூறிய பிஎஸ்எஃப் வீரரின் விருப்ப ஓய்வு நிராகரிப்பு

ராணுவ வீரர்களுக்கு கொடுக்கப்படும் உணவு குறித்து விடியோவில் புகார் கூறியிருந்த பிஎஸ்எஃப் வீரர் தேஜ் பஹதூர் யாதவ்வின் விருப்ப ஓய்வு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :3 பிப்ரவரி 2017, 9:03 am

DIN


புது தில்லி: ராணுவ வீரர்களுக்கு கொடுக்கப்படும் உணவு குறித்து விடியோவில் புகார் கூறியிருந்த பிஎஸ்எஃப் வீரர் தேஜ் பஹதூர் யாதவ்வின் விருப்ப ஓய்வு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

ராணுவ வீரர்களுக்கு முறையாக உணவு வழங்கப்படுவதில்லை என்றும், பல நாள் பசியோடுதான் உறங்கச் செல்வதாகவும் தேஜ் பஹதூர் யாதவ் கூறியிருந்த புகார் விடியோ சமூக தளங்களில் வைரஸ் போல பரவியது.

இந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவரது விருப்ப ஓய்வு மனு நிராகரிக்கப்பட்டதாகவும் அவரது மனைவி ஊடகங்களில் தெரிவித்துள்ளார். ராணுவ  அதிகாரிகள் தன்னை துன்புறுத்துவதாக ராவ் பகதூர் கூறியதாகவும் அவரது மனைவி ஷர்மிளா பகதூர் தெரிவித்தார்.

ஆனால், தேஜ் பகதூர் கைது செய்யப்படவில்லை என்றும், அவரது விருப்ப ஓய்வு மனு நிராகரிக்கப்பட்டது உண்மை என்றும் பிஎஸ்எஃப் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அவரது குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை நிலுவையில் இருப்பதால், அவரது விருப்ப ஓய்வு மனு நிராகரிக்கப்பட்டதாகவும், அவரை யாரும் துன்புறுத்தவில்லை, அவர் மனைவியோடு பேச சுதந்திரம் அளிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.