தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பஞ்சாப்  மற்றும் கோவாவில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு!

பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் இன்று நடைபெற்ற சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

News image
Updated On :4 பிப்ரவரி 2017, 2:45 pm

DIN

புதுதில்லி: பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் இன்று நடைபெற்ற சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பஞ்சாப்பில்  மொத்தமுள்ள 117 தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. மொத்தம் 1145 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர். இந்த தேர்தலில்  70 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதேபோல் கோவா சட்டசபை தேர்தலுக்கு இன்று காலை 7 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக  நடந்தது.  மொத்தமுள்ள, 40 தொகுதிகளில் 250 வேட்பாளர்கள், களத்தில் நின்றனர். கோவா மாநிலத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 83 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடந்து உத்தரகாண்ட், உ.பி, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் வரிசையாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.