பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவின் பக்கத்து அறை கைதி 'சயனைடு' மல்லிகா சிறை மாற்றம்!

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவின் பக்கத்து அறை கைதியாக இருந்த 'சயனைடு' மல்லிகா என்னும் குற்றவாளி வேறு சிறைக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

News image
Updated On :22 பிப்ரவரி 2017, 9:08 am

பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவின் பக்கத்து அறை கைதியாக இருந்த 'சயனைடு' மல்லிகா என்னும் குற்றவாளி வேறு சிறைக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்ற அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா அவருடைய உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சிறையில் சசிகலாவின் பக்கத்துக்கு அறையில் அடைக்கப்பட்டுள்ளவர் கொடூர கொலைக்குற்றவாளியான 'சயனைடு'  மல்லிகா. இவரின் இயற்பெயர் கெம்பம்மா. பெங்களூரு அருகேயுள்ள கோயில் ஒன்றின் ரெகுலர் பக்தை இவர். அந்தக் கோயிலுக்கு வரும் பக்தைகளின் கஷ்டத்தை அவர்களிடம் பேசி தெரிந்து கொள்வார்.

அப்படி வரும் பக்தர்களில் வசதியுள்ள பணக்கார பெண்களாக பார்த்து ஆறுதலளிக்கும் விதத்தில் அவர்களிடம் மல்லிகா    பேசுவார். மேலும் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தினால் எல்லாம் சரியாகி விடும் எனக் கூறுவார். அதற்குத் தனியாக வர வேண்டும் என்பார். அப்படி வரும் பெண்களுக்கு சயனைடு கலந்த தண்ணீரை கொடுத்து, கொலை செய்து, நகைகளைக் கொள்ளையடித்துச் சென்று விடுவார். 

ஆறு  பெண்களை மல்லிகா கொலை செய்துள்ளார். சயனைடு கலந்து கொலைசெய்ததால், இவர் ‘சயனைடு மல்லிகா’ என்று அழைக்கப்பட்டார். இவருக்கு முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டு  பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது

தற்போது சசிகலாவின் உயிருக்கு சிறையில் அச்சுறுத்தல் இருப்பதாக அதிமுகவிஞர் கருத்து தெரிவித்ததால்  கடந்த வாரங்களில் செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து மல்லிகா தலைப்புச்செய்திகளில் இடம் பிடித்தார். இந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக சயனைடு மல்லிகாவை பெலகவியில் உள்ள ஹிண்டல்கா சிறைச்சாலைக்கு மாற்றம் செய்தனர்

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்றம் செய்யும் முயற்சியில் அவரது வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், தற்போது சயனைடு மல்லிகாவை வேறு சிறைக்கு கர்நாடக சிறை அதிகாரிகள் மாற்றம் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.