மீரா குமார், கோபாலகிருஷ்ண காந்திக்கு ஆதரவளியுங்கள்: சோனியா கோரிக்கை

குடியரசுத் தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தலில் மீரா குமார் மற்றும் கோபாலகிருஷ்ண காந்தி ஆகியோருக்கு எதிர்கட்சிகள் அனைத்தும் ஆதரவு அளிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர்சோனியா தெரிவித்தார்.
மீரா குமார், கோபாலகிருஷ்ண காந்திக்கு ஆதரவளியுங்கள்: சோனியா கோரிக்கை
Updated on
1 min read

குடியரசுத் தலைவர் தேர்தல் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. இதன்காரணமாக எதிர்கட்சிகளின் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா கூறியதவாது:

எண்ணிக்கை அடிப்படையில் நாம் பின்தங்கி இருக்கலாம். ஆனாலும் போரிடாமல் வீழக்கூடாது. நம்முடைய வேட்பாளர்கள் மீரா குமார் மற்றும் கோபாலகிருஷ்ண காந்தி ஆகிய இருவரும் தகுதியான வேட்பாளர்கள். ஆகவே அவர்களுக்கு நம் அனைவரின் ஆதரவும் மிக அவசியம்.

குறுகிய மனப்பான்மையும், மதவாத அரசியலையும் ஊக்குவிப்பவர்களுக்கு நாம் எந்த விதத்திலும் இடம் கொடுக்கக் கூடாது. முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு நமது ஒற்றுமை இந்தத் தேர்தலில் வெளிப்பட வேண்டும்.

இந்தத் தேர்தலானது எதிர்காலத்துக்கான சுதந்திரப் போர். நமது செயல்களில், எண்ணங்களில் தெளிவும், தைரியமும், நம்பிக்கையும் இருக்க வேண்டியது மிக அவசியமாகும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com