மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஒளரங்காபாதுக்குள் நுழைய எதிர்ப்பு: மும்பை திரும்பினார் தஸ்லிமா நஸ்ரீன்

மகாராஷ்டிர மாநிலம், ஒளரங்காபாதுக்குள் நுழைய வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீனுக்கு முஸ்லிம் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அவர் மீண்டும் மும்பை திருப்பி அனுப்பப்பட்டார்.

News image
Updated On :30 ஜூலை 2017, 7:03 pm

DIN

மகாராஷ்டிர மாநிலம், ஒளரங்காபாதுக்குள் நுழைய வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீனுக்கு முஸ்லிம் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அவர் மீண்டும் மும்பை திருப்பி அனுப்பப்பட்டார்.

இதுகுறித்து போலீஸார் தெரிவித்ததாவது:
வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன், ஒளரங்காபாதில் 3 நாள்கள் தங்கியிருந்து, உலகப் பாரம்பரியச் சின்னங்களான அஜந்தா, எல்லோரா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களைப் பார்வையிடத் திட்டமிட்டிருந்தார்.
அதற்காக, அவர் மும்பையிலிருந்து ஒளரங்காபாதுக்கு விமானம் மூலம் சனிக்கிழமை இரவு வந்தார்.
எனினும், அவரது வருகையை முன்கூட்டியே அறிந்துகொண்ட முஸ்லிம் அமைப்பினர், தஸ்லிமா ஒளரங்காபாத் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், தஸ்லிமா நஸ்ரீன் தங்குவதாக இருந்த விடுதி முன்பும் ஏராளமானோர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதையடுத்து, நகரில் சட்டம், ஒழுங்கைப் பாதுகாப்பதற்காக அவரைத் திரும்பச் செல்லும்படி கேட்டுக் கொண்டோம்.
அதற்கு சம்மதம் தெரிவித்த தஸ்லிமா, மீண்டும் மும்பை திரும்பிச் சென்றார் என்று போலீஸார் தெரிவித்தனர்.
தஸ்லிமா நஸ்ரீன் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒளரங்காபாத் விமான நிலையத்தில் அகில இந்திய மஜ்லீஸ் இட்டெஹாதுல் முஸ்லிமின் கட்சி எம்எல்ஏ இம்தியாஸ் ஜலீலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து ஒளரங்காபாத் மத்திய தொகுதி எம்எல்ஏ-வான இம்தியாஸ் ஜலீல் கூறுகையில், தனது நூல்கள் மூலம் தஸ்லிமா நஸ்ரீன் உலகம் முழுவதிலும் உள்ள முஸ்லிம்களின் மத உணர்வைப் புண்படுத்தியுள்ளதால், அவரை நகருக்குள் அனுமதிக்க மாட்டோம் என்றார். முற்போக்கு எழுத்தளரான தஸ்லிமா நஸ்ரீனின் உயிருக்கு வங்கதேசத்தில் மத அடிப்படைவாதிகளால் ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக, அவர் கடந்த 1994-ஆம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறினார்.
ஸ்வீடன் குடியுரிமை பெற்றிருந்தாலும், அவர் கடந்த 2004-ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் வசித்து வருகிறார்.
இந்தியாவில் அவருக்குக் குடியுரிமை வழங்கப்படவில்லை என்றாலும், தொடர்ச்சியாக அவரது நுழைவு இசைவு (விசா) புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
தஸ்லிமா நஸ்ரீனுக்கான விசாவை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த வாரம் மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டித்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.