திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

அதிக எடை கொண்ட செயற்கைகோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது  ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3!

இந்தியாவில் முதன் முறையாக அதிக எடை கொண்ட ஜி.சாட்-19 செயற்கைகோளுடன், ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டானது இன்று வெற்றிகரமாக ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில்... 

News image
Updated On :5 ஜூன் 2017, 12:48 pm

DIN

சென்னை: இந்தியாவில் முதன் முறையாக அதிக எடை கொண்ட ஜி.சாட்-19 செயற்கைகோளுடன், ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டானது இன்று வெற்றிகரமாக ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமானது தான் செலுத்தும் அதிக எடை கொண்ட செயற்கைகோள்களை எல்லாம் இதுவரை, பிரெஞ்ச் கயானாவில் இருந்து 'ஏரியன்' வகை ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் செலுத்தி வருகிறது.

இதற்கு மாற்றாக முற்றிலும் கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் செயல்படும் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டை இஸ்ரோ தற்பொழுது உள்நாட்டிலேயே தயாரித்து இருக்கிறது. இந்த வகை ராக்கெட்டைப் பயன்படுத்தி செயற்கைகோள் ஏவும் செயல் இன்று தொடங்கியது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா இரண்டாவது ஏவுதளத்திலிருந்து இன்று மாலை 5:28 மணிக்கு, ஜி.சாட்-19 தகவல்தொடர்பு செயற்கைகோளுடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.  ஜி.சாட்-19 தகவல் தொடர்பு செயற்கைகோளானது 3,136 கிலோ எடைகொண்டது ஆகும். இந்த செயற்கைகோளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் ஆகும்.

இதில் நவீன வசதிகளுடன் கூடிய தகவல் தொடர்பு டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பூமியை படம் எடுத்து அனுப்புதல், கடல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், சாலை போக்குவரத்தை கண்காணித்தல், நிலம் தொடர்பான தகவல்கள், புவியியல் ஆய்வு உள்ளிட்ட பல்வேறு தகவல் தொடர்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது. 

விண்ணில் ஏவப்பட்ட செயற்கைகோளானது தற்பொழுது பூமியிலிருந்து 179 கிலோ மீட்டர் தொலைவில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.