அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

யாருக்கு ஆதரவு?: வெங்கய்ய நாயுடுவுடன் தம்பிதுரை ஆலோசனை

குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து தில்லியில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடுவுடன் மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை

News image
தில்லியில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடுவை வெள்ளிக்கிழமை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசும் மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை.
Updated On :16 ஜூன் 2017, 7:05 pm

DIN

குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து தில்லியில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடுவுடன் மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி சார்பில் யாரை வேட்பாளராக முன்னிறுத்தலாம் என்பது குறித்து பாஜக மேலிடம் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் கூட்டணிக் கட்சிகளுடனும் பிற அரசியல் கட்சிகளுடனும் ஆலோசனை நடத்துவதற்காக மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், வெங்கய்ய நாயுடு, அருண் ஜேட்லி ஆகியோர் அடங்கிய குழுவை பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நியமித்துள்ளார்.
இந்தக் குழுவினர் தில்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினர்.
இந்நிலையில், வெங்கய்ய நாயுடுவை அவரது இல்லத்தில் மக்களவைத் துணைத் தலைவரும், அதிமுக "அம்மா' கட்சியின் மூத்த தலைவருமான மு.தம்பிதுரை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். சுமார் 20 நிமிடங்கள் இச்சந்திப்பு நடைபெற்றது.
இதுகுறித்து பின்னர் தம்பிதுரையிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, "வெங்கய்ய நாயுடு எனது நண்பர். அவரை அரசியல் ரீதியாக சந்திக்கவில்லை' என்றார்.
இதையடுத்து, குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழகத்தில் ஆளும் அதிமுக அம்மா கட்சியின் ஆதரவு யாருக்கு வழங்கப்படும் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, "எம்ஜிஆர் காலத்தில் இருந்தே மத்தியில் ஆளும் அரசுடன் அதிமுக இணக்கமாக இருந்துள்ளது.
தற்போதும் ஆளும் பாஜக கூட்டணி அரசுடன் அதிமுக இணக்கமாக உள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலில் யார் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார்கள் என்பதை மத்தியில் ஆளும் பாஜக இன்னும் அறிவிக்கவில்லை. வேட்பாளர் அறிவிக்கப்பட்டவுடன் அதிமுக அம்மா கட்சித் தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்துவர். அதன் பிறகு இந்த விஷயத்தில் முடிவு எடுக்கப்படும்' என்றார்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் வெங்கய்ய நாயுடு கூறுகையில், "குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக ஒவ்வொரு அரசியல் கட்சித் தலைவர்களிடமும் பொதுவான வேட்பாளரை முன்னிறுத்துவது பற்றி பேசி வருகிறோம். அந்த வகையில் தம்பிதுரையுடனும் பேசினேன்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.