மேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

குடியரசுத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் சார்பில் விரைவில் பொது வேட்பாளர் அறிவிப்பு

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் விரைவில் பொது வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று இடதுசாரிக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

News image
Updated On :20 ஜூன் 2017, 8:19 pm

DIN

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் விரைவில் பொது வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று இடதுசாரிக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், பொது வேட்பாளருக்காக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா, மக்களவை முன்னாள் தலைவர் மீராகுமார் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜூலை 17-ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலை முன்னிட்டு, மத்தியில் ஆட்சிபுரியும் பாஜக சார்பில் வேட்பாளராக பிகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒருவரையே குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், ராம்நாத் கோவிந்தை குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாஜக அறிவித்தது. மேலும், அவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் எதிர்க்கட்சிகள் அவருக்கு ஆதரவளிக்கும் என்ற நம்பிக்கையில் பாஜக இவ்வாறு முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆனால், ராம்நாத் கோவிந்தை தாங்கள் ஆதரிக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் அறிவித்துள்ளனர். மேலும், இந்த விவகாரம் குறித்து வரும் 22-ஆம் தேதி ஆலோசனை நடத்தவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
இந்நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் சார்பில் ஒரு பொது வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதற்காக, இந்தியக் கம்யூனிஸ்ட் தேசியச் செயலர் டி.ராஜா, மக்களவை முன்னாள் தலைவர் மீரா குமார், காங்கிரஸ் மூத்த தலைவர் சுஷில்குமார் ஷிண்டே, அம்பேத்கரின் பெயரன் பிரகாஷ், மகாத்மா காந்தியின் பெயரன் கோபால் கிருஷ்ண காந்தி ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.