ரமலான் கொண்டாட்டத்தில் யோகி ஆதித்யநாத் பங்கேற்காதது ஏன்? அகிலேஷ் யாதவ் கேள்வி

லக்னொவில் திங்கள்கிழமை நடைபெற்ற ரமலான் கொண்டாட்டத்தில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்காதது ஏன்? என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கேள்வியெழுப்பியுள்ளார்.
ரமலான் கொண்டாட்டத்தில் யோகி ஆதித்யநாத் பங்கேற்காதது ஏன்? அகிலேஷ் யாதவ் கேள்வி

லக்னொவில் திங்கள்கிழமை நடைபெற்ற ரமலான் கொண்டாட்டத்தில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்காதது ஏன்? என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கேள்வியெழுப்பியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தை இதுவரை ஆண்ட அனைத்து முதல்வர்களும் ரமலான் தினத்தன்று ஈத்கா மைதானத்துக்குச் (சிறப்புத் தொழுகை நடைபெறும் இடம்) சென்று பார்வையிடுவது வழக்கம். இந்த ஆண்டு முதல்வர் யோகி ஆதித்யநாத் மேற்கண்ட நடைமுறையைக் கடைப்பிடிக்கவில்லை. எனினும், துணை முதல்வர் தினேஷ் சர்மா லக்னௌவிலுள்ள ஈத்கா மைதானத்துக்குச் சென்றார்.
இதேபோல், மாநில ஆளுநர் ராம் நாயக்கும் ஈத்கா மைதானத்துக்குச் சென்றார்.
இந்நிலையில், லக்னௌவிலுள்ள ஈத்கா மைதானமொன்றில் நடைபெற்ற தொழுகையில் அகிலேஷ் யாதவ் பங்கேற்றார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முன்னாள் முதல்வராகிய நான் இங்கு தொழுகையில் பங்கேற்றுள்ளேன். ஆனால், முதல்வர் யோகி ஆதித்யநாத் ரமலான் கொண்டாட்டத்தில் ஏன் பங்கேற்கவில்லை? என்பதை அவர் விளக்க வேண்டும் என்றார்.
யோகி ஆதித்யநாத் ஈத்கா மைதானத்துக்குச் செல்லவில்லை என்றபோதிலும், ரமலானையொட்டி முஸ்லிம்களுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com