தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

குடியரசுத் தலைவராக கொல்கத்தாவுக்கு கடைசிப் பயணம்: பிரணாப் உருக்கம்

நாட்டின் குடியரசுத் தலைவராக கொல்கத்தாவுக்கு வருகை தந்தது, இதுவே எனக்கு கடைசிப் பயணமாக இருக்கும் என்று பிரணாப் முகர்ஜி கூறினார்.

News image
Updated On :29 ஜூன் 2017, 8:49 pm

DIN

நாட்டின் குடியரசுத் தலைவராக கொல்கத்தாவுக்கு வருகை தந்தது, இதுவே எனக்கு கடைசிப் பயணமாக இருக்கும் என்று பிரணாப் முகர்ஜி கூறினார்.
பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது. மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த அவர், கொல்கத்தாவில் வசித்திருக்கிறார். மேலும், நாடாளுமன்ற உறுப்பினராக, மத்திய அமைச்சராக பல முறை அவர் கொல்கத்தாவுக்கு வந்திருக்கிறார்.
இந்நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, இரண்டு நாள் பயணமாக அவர், வியாழக்கிழமை கொல்கத்தாவுக்கு வருகை தந்தார்.
அங்குள்ள தேசிய புள்ளியியல் கல்வி நிறுவனத்தில், முதல் திட்டக் குழுவின் (மத்தி கொள்கைக் குழுவின் முந்தைய பெயர்) உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் பி.சி.மஹலானோபிஸின் 125-ஆவது பிறந்த தின நிகழ்ச்சியை பிரணாப் முகர்ஜி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
இந்தப் பயணம் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், குடியரசுத் தலைவர் என்ற முறையில் கொல்கத்தாவுக்கு வருவது இதுவே எனக்கு கடைசிப் பயணமாக இருக்கக் கூடும்.
எனது பதவிக் காலம் முடிவடைய இருக்கும் இந்த தருணத்தில், ஆசிரியர்கள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் என அறிவார்ந்த சமூகத்தினர் மத்தியில் பேசும் வாய்ப்பு கிடைத்ததற்கு முதலில் மகிழ்ச்சியடைகிறேன்.
கொள்கைகளில் பிடிவாதமாக இருப்பதும், வளைந்து கொடுக்காத தன்மையும் நமது வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் மிகப்பெரிய தடையாக உள்ளன. புதிய கொள்கைகளை ஒருவர் திறந்த மனதுடன் ஏற்க வேண்டும். பிறகு அவற்றை ஆய்வுசெய்து பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும்.
1991-ஆம் ஆண்டில் அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த சீர்திருத்த நடவடிக்கைகளால், பொதுத் துறை நிறுவனங்கள் வளர்ச்சி அடைந்தன என்று பிரணாப் முகர்ஜி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.