பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

திருப்பதியில் ரூ.140 கோடியில் புற்றுநோய் மருத்துவமனை

திருப்பதியில் ரூ.140 கோடி மதிப்பீட்டில் புதிய புற்றுநோய் மருத்துவமனை ஏற்படுத்தப்பட உள்ளதாக தேவஸ்தான செயல் அதிகாரி

News image
Updated On :6 மே 2017, 3:27 am

DIN

திருப்பதி: திருப்பதியில் ரூ.140 கோடி மதிப்பீட்டில் புதிய புற்றுநோய் மருத்துவமனை ஏற்படுத்தப்பட உள்ளதாக தேவஸ்தான செயல் அதிகாரி சாம்பசிவ ராவ் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
ஆந்திர அரசு திருப்பதியை உலகத் தரம் வாய்ந்த மருத்துவ மையமாக மாற்ற பல மருத்துவமனைகளை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி, அரவிந்த் கண் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் இன்னும் 15 நாள்களில் தொடங்கப்பட உள்ளது.

இதேபோல் டாடா குழுமம் திருப்பதியில் புற்றுநோய் மருத்துவமனையை ஏற்படுத்த உள்ளது. இதற்காக திருப்பதி எஸ்.வி. வேதிக் பல்கலைக்கழகம் அருகே தேவஸ்தானம் 25 ஏக்கர் நிலத்தை குத்தகை அடிப்படையில் டாடா நிறுவனத்துக்கு ஒதுக்கி உள்ளது.

இங்கு ரூ.140 கோடி செலவில் உலகத்தரம் வாய்ந்த புற்றுநோய் மருத்துவமனை ஏற்படுத்தப்பட உள்ளது. இதில், ரூ.100 கோடி டாடா நிறுவனமும், ரூ.40 கோடியை நன்கொடை மூலம் வசூல் செய்ய உள்ளதாகவும் சாம்பசிவ ராவ் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.