அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

இருவராகக் கைதாகி மூவராக விடுதலையான பாகிஸ்தான் சகோதரிகள்

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு அமிருதசரஸ் சிறையில் இருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த ஃபாத்திமா மற்றும் அவரது சகோதரி மும்தாஜ் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். 

News image
Updated On :2 நவம்பர் 2017, 12:24 pm

DIN

அமிருதசரஸ்: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு அமிருதசரஸ் சிறையில் இருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த ஃபாத்திமா மற்றும் அவரது சகோதரி மும்தாஜ் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். 

அவர்களுடன், சிறையிலேயே பிறந்து சிறையிலேயே கடந்த 11 ஆண்டுகளாக வளர்ந்து வந்த ஃபாத்திமாவின் மகள் ஹினாவும் விடுதலையாகியுள்ளார்.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இவ்விரண்டு பெண்களும் 10 ஆண்டுகளுக்கும் முன்பு கைது செய்யப்பட்டனர். கர்ப்பிணியாக இருந்த ஃபாத்திமாவுக்கு சிறையிலேயே ஹினா பிறந்தார்.

இந்த நிலையில், சிறையில் இருந்து விடுதலையான சகோதரிகள், மகளுடன் அட்டாரி எல்லை வழியாக பாகிஸ்தான் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எங்களது வழக்குரைஞர் நவ்ஜோத் ஜி மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் விடுதலைக்கு உதவிய முழு இந்தியாவுக்கும் நன்றி என்று ஃபாத்திமா கூறினார்.

இதுவரை தனது வீட்டையே பார்த்திராத ஹினா கூறுகையில், நான் என் வீட்டுக்குச் செல்லப் போகிறேன். இதுவரை பார்த்திராத என் தந்தையைப் பார்க்கப் போகிறேன் என்பதால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன் என்கிறார்.

பாகிஸ்தான் சகோதரிகளின் விடுதலைக்காக போராடி வந்த வழக்குரைஞர் நவ்ஜோத் கௌ சாபா, தனது போராட்டம் வீண் போகவில்லை என்று சந்தோஷப்படுகிறார். மிகப்பெரிய நீண்ட போராட்டத்துக்குப் பிறகே ஹினா விடுதலை செய்யப்பட்டுள்ளார். இவர்களுக்காகப் போராடுவதற்குக் காரணமே ஹினா தான். எந்த தவறும் செய்யாமல் அவர் சிறையில் உள்ளார். எனக்கு இன்றுதான் தீபாவளி என்கிறார் வழக்குரைஞர் நவ்ஜோத் தாயுள்ளத்தோடு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.