ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

துப்பாக்கியால் சுடப்பட்டும் போராடி கொள்ளையர்களைத் தடுத்த ஏடிஎம் காவலாளி! (விடியோ) 

கொள்ளையர்களால் உடலில் குண்டுக்காயம் பட்ட நிலையிலும், தில்லியில்  ஏடிஎம் காவலாளி ஒருவர் அவர்களைத் துணிச்சலாக தடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

News image
Updated On :16 நவம்பர் 2017, 7:52 am

DIN

புதுதில்லி: கொள்ளையர்களால் உடலில் குண்டுக்காயம் பட்ட நிலையிலும், தில்லியில்  ஏடிஎம் காவலாளி ஒருவர் அவர்களைத் துணிச்சலாக தடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

தில்லியின் மஜ்ரா தபாஸ் என்ற பகுதியில் எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஏடிஎம்மில் பைக்கில் வந்த ஹெல்மெட் அணிந்திருந்த  இரண்டு கொள்ளையர்கள் பணத்தைத் திருட முயற்சித்தனர்.

அதற்காக முதலில் வாயிலில் நின்றிருந்த ஏடிஎம் காவலாளியினை நோக்கி துப்பாக்கியில் சுட்டனர். சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் அங்கு வராமல் இருக்க, வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். காவலாளி உடலில் ரத்தப்போக்கு உண்டான பொழுதும், போராடி தொடர்ந்து அவர்களைத் திருட விடாமல் தடுத்துள்ளார்.

அவர் கையில் பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கியினையும் அவர்கள் பறித்த நிலையிலும் அவர் தளரவில்லை. இறுதியில் கொள்ளையர்கள் பணத்தினை திருடமுடியாமல் அங்கிருந்து பைக்கில் தப்பிச் சென்றுவிட்டனர்.

அதன்பின்னர் அங்கு கூடிய பொதுமக்கள் ஏடிஎம் காவலாளியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு தற்பொழுது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விடியோ: 

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.