தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்ட ‘பத்மாவதி’ திரைப்பட வெளியீடு! 

எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருவதன் காரணமாக பத்மாவதி திரைப்பட வெளியீட்டுத் தேதி தள்ளிவைக்கப்படுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்து உள்ளது.
தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்ட ‘பத்மாவதி’ திரைப்பட வெளியீடு! 

மும்பை: எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருவதன் காரணமாக பத்மாவதி திரைப்பட வெளியீட்டுத் தேதி தள்ளிவைக்கப்படுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்து உள்ளது.

ராஜபுத்திர ராணி சித்தூர் ராணி பத்மினியின் கதை இந்தியில் ‘பத்மாவதி’ என்ற பெயரில் சினிமாவாக தயாரிக்கப்பட்டுள்ளது. பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில்   பிரபல நடிகை தீபிகா படுகோனே 'பத்மாவதி' கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

முதலில் இந்தப்படம் டிசம்பர் 1-ந்தேதி திரைக்கு வருவதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருந்த பொழுது பத்மாவதி படத்துக்கு ரஜபுத்தர மன்னர்களின் வம்சத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை தொடங்கினர். நடிகை தீபிகா படுகோனேவிற்கு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டது. அதேசமயம் பத்மாவதி படத்தை திரையிட ராஜஸ்தான், உத்தர பிரதேச அரசுகளும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

இந்நிலையில் ‘பத்மாவதி’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான வையாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் தேதி குறிப்பிடாமல் வெளியீட்டுத் தேதி தள்ளி வைக்கப்படுவதாக அறிவித்து உள்ளது. தானாக முன்வந்து இம்முடிவை எடுத்து உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்து உள்ளது. சட்ட விதிகளுக்கு மதிப்பளிப்பதாக தெரிவித்து உள்ள தயாரிப்பு நிறுவனம் வரும் நாட்களில் திரைப்படத்தை வெளியிடும் தேதியை அறிவிப்பதாக குறிப்பிட்டு உள்ளதாக அந்த நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com