தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

டிக்கெட் கேட்ட பெண் நடத்துநர்; கும்மாங்குத்து விட்ட பெண் காவலர் (விடியோ)

பேருந்து பயணத்தின் பொழுது டிக்கெட் கேட்ட பெண் நடத்துநரை, பெண் காவலர் ஒருவர் சரமாரியாக தாக்கும் விடியோ ஒன்று தற்பொழுது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

News image
Updated On :4 அக்டோபர் 2017, 8:47 am

DIN

மஹபூப் நகர் (தெலுங்கானா): பேருந்து பயணத்தின் பொழுது டிக்கெட் கேட்ட பெண் நடத்துநரை, பெண் காவலர் ஒருவர் சரமாரியாக தாக்கும் விடியோ ஒன்று தற்பொழுது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

தெலுங்கானா மாநிலத்தின் மஹபூப் நகர் பகுதியில் கடந்த வாரம் ரஜிதா என்ற பெண் காவலர் ஒருவர் அங்கிருந்து நவாப்பேட் என்ற பகுதிக்கு  பேருந்தில் பயணம் செய்துள்ளார்.

அப்பொழுது அவரிடம் பணியிலிருந்த பெண் நடத்துநர் டிக்கெட் கட்டணமான ரூபாய் 15-ஐ செலுத்துமாறு கூறியிருக்கிறார். அதற்கு ரஜிதா, 'பணியிலிருக்கும் அரசு ஊழியரான தனக்கு அரசுப் பேருந்தில் இலவசமாகப்  பயணம் செய்ய உரிமை உள்ளது' என்று கூறியிருக்கிறார்.

அதனை ஏற்காத பெண் நடத்துநர் மீண்டும் டிக்கெட் எடுக்குமாறு வலியுறுத்த அவர்களுக்குள் வாய்த் தகராறு தகராறு மூண்டிருக்கிறது. அது அப்படியே பெரிதாகி ஒருவரை ஒருவர் தாக்கத் துவங்கினர்.பெண் நடத்துநரைப் பிடித்து கீழே தள்ளிய ரஜிதா அவரை தொடர்ச்சியாக குத்தத் துவங்கினார்.

இந்த ஒட்டு மொத்த நிகழ்வையும் சக பயணி ஒருவர் எடுத்த விடியோவானது தற்பொழுது இணையத்தில் வைரலாகப் பார்வை வருகிறது. சண்டையின் ஊடே அவர் ரஜிதாவை நோக்கி , 'நடத்துநர் தன் கடமையைதான்  செய்கிறார் என்று கூறி தடுக்க முயன்றாலும் அவர்கள் கேட்பதாக இல்லை.

பின்னர் அந்த பெண் நடத்துநர் ரஜிதா பணிபுரியும் நவாப்பேட்காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் செய்துள்ளார்.  அதற்காக மஹபூப் நகர் காவல் கண்காணிப்பாளர் அதிகாரப்பூர்வமற்ற விசாரணை ஒன்றுக்கு உத்தரவிட்டதாகவும், அதனைத் தொடர்ந்து தெலுங்கானா காவல் துறை சார்பாக முழுமையான விசாரணைக்கு ஆணையிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

விடியோ:

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.