சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த தினம் அனுசரிப்பு

மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த தினத்தை (அக்.2, 2019) ஆண்டுமுழுவதும் கொண்டாடுவதற்கு ஒத்துழைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 7:26 pm

DIN

மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த தினத்தை (அக்.2, 2019) ஆண்டுமுழுவதும் கொண்டாடுவதற்கு ஒத்துழைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கலாசாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மகாத்மா காந்தியின் 150 -ஆவது பிறந்த தினத்தை நாடு முழுவதும் மற்றும் சர்வதேச அளவில் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. காந்திஜியின் கருத்துகளை பிரசாரம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்குத் தேவையான யோசனைகளை வழங்கவும், வழிகாட்டவும், மேற்பார்வை செய்யவும் பிரதமர் மோடி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில், அனைத்து மாநில முதல்வர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், காந்தியவாதிகள், சமூகத்தில் மிக முக்கியமானவர்கள் ஆகியோர் அங்கம் வகிப்பார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.