அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கன்னையா உள்ளிட்டோர் மீதான ஜேஎன்யு-வின் ஒழுங்கு நடவடிக்கை நீதிமன்றத்தால் ரத்து

தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர் சங்க முன்னாள் தலைவர் கன்னையா குமார் மற்றும் 14 மாணவர்கள் மீது அந்தப் பல்கலைக்கழகம் எடுத்துள்ள ஒழுங்கு நடவடிக்கைகளை தில்லி

News image
Updated On :12 அக்டோபர் 2017, 9:00 pm

DIN

தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர் சங்க முன்னாள் தலைவர் கன்னையா குமார் மற்றும் 14 மாணவர்கள் மீது அந்தப் பல்கலைக்கழகம் எடுத்துள்ள ஒழுங்கு நடவடிக்கைகளை தில்லி உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை ரத்து செய்தது.
2001-ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தாக்குதலுக்குக் காரணமான அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து, ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 9-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில், தேச விரோத கோஷங்கள் எழுப்பப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.
இதுதொடர்பாக, நிகழ்ச்சியை நடத்திய கன்னையா குமார், உமர் காலித், அனிர்பான் பட்டாச்சார்யா ஆகியோர் தேசத் துரோகக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். எனினும், அவர்கள் மீது இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. இதற்கிடையே, அந்த மூவர் உள்ளிட்ட 15 மாணவர்கள் மீது ஜேன்யு நிர்வாகம் பல்வேறு ஒழுங்கு நடவடிக்கைகள் எடுத்தது.
அந்த மாணவர்களுக்கு பருவத் தேர்வுகளை எழுதுவதற்குத் தடை விதிப்பது, மாணவர் விடுதியிலிருந்து வெளியேற்றுவது உள்ளிட்ட தண்டனைகள் விதிக்கப்பட்டன.
இதையடுத்து, பல்கலைக்கழக நிர்வாகத்தின் ஒழுங்கு நடவடிக்கையை எதிர்த்து மாணவர்கள் சார்பில் தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 
அந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி வி.கே. ராவ், ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு முன்னதாக தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து தன்னிலை விளக்கமளிப்பதற்கு மாணவர்களுக்குப் போதிய வாய்ப்பு தரப்படவில்லை என்ற மனுதாரர்களின் வாதத்தை ஏற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, ஜேஎன்யு நிர்வாகத்தின் ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்த நீதிபதி, இந்த விசாரணை தொடர்பான ஆவணங்களை தண்டனை பெற்ற மாணவர்கள் சரிபார்ப்பதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் எனவும், இதுகுறித்து ஆறு வாரங்களுக்குள் மீண்டும் புதிதாக விசாரணை நடத்தி, முடிவெடுக்க வேண்டும் எனவும் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.