பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கௌரி லங்கேஷ் படுகொலை: சிறப்பு விசாரணைக் குழு அமைத்தது கர்நாடக அரசு

மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் மரணம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து கர்நாடக மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

News image
Updated On :6 செப்டம்பர் 2017, 10:52 am

DIN


பெங்களூர்: மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் மரணம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து கர்நாடக மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மூத்த காவல்துறை அதிகாரிகளுடன் இன்று கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் மாநில உள்துறை அமைச்சர் ராமலிங்கா ரெட்டி ஆலோசனை நடத்தினர்.

அப்போது, கௌரி லங்கேஷ் படுகொலை குறித்து விசாரிக்க காவல்துறை ஆய்வாளர் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைப்பது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய சித்தராமையா, கௌரி லங்கேஷ் படுகொலை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவும் நான் தயார். ஆனால் முதலில் சிறப்பு விசாரணைக் குழு விசாரிக்கட்டும். அவர்களது குடும்பத்தில் யாரேனும் சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தினால் நிச்சயம் அது செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.