

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தானுடனான துப்பாக்கிச் சண்டையில் எல்லை பாதுகாப்பு படை வீரர் பிஜேந்திர பகதூர் சிங் வீர மரணம் அடைந்தார்.
ஜம்மு-காஷ்மீரின் மாநிலம் ஆர்.எஸ் புரா பிரிவில் உள்ள ஆர்னியா பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் பிஜேந்திர பகதூர் சிங் வீர மரணம் அடைந்தார். அந்த பகுதியை சேர்ந்து பொதுமக்களில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.