புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

முக்கியஸ்தர்களுக்கான பாதுகாப்புக் குறைப்பு: கருணாநிதிக்கு வழங்கப்படும் இசட்+ ரத்தாகும்?

இசட் பிளஸ் பாதுகாப்புப் பெற்று வரும் முக்கியப் பிரமுகர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

News image

file photo

Updated On :16 செப்டம்பர் 2017, 7:38 am

DIN


புது தில்லி: இசட் பிளஸ் பாதுகாப்புப் பெற்று வரும் முக்கியப் பிரமுகர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

நாட்டில் எப்போதும் இல்லாத அளவுக்கு மோடி தலைமையிலான அரசு, இந்தியா முழுவதும் சுமார் 475 பேருக்கு பாதுகாப்பு வழங்கி வருகிறது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் கூட 350 முக்கியப் பிரமுகர்களுக்கு மட்டுமே பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், மேலும் சில அரசில்வாதிகள் தங்களுக்கு தேசிய பாதுகாப்புப் படையின் பாதுகாப்புக் கேட்டு கோரிக்கை வைத்திருக்கும் நிலையில், ஒரு சில முக்கிய பிரமுகர்களுக்கு தேசிய பாதுகாப்புப் படை மற்றும் துணை ராணுவப் படையின் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதில், தேசிய பாதுகாப்புப் படையை மட்டும் விலக்கிக் கொள்ள பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இதில், திமுக தலைவர் கருணாநிதி, பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோருக்கு தேசிய பாதுகாப்புப் படை மற்றும் துணை ராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

எனவே, இவர்களுக்கு வழங்கப்படும் தேசிய பாதுகாப்பு படை பாதுகாப்பை விலக்கிக் கொள்வது குறித்து பரிசீலிப்பதாகவும், இந்த தலைவர்கள் பயணம் மேற்கொள்ளும் போது கூடுதல் பாதுகாப்பு வழங்குவது குறித்து கருத்தில் கொள்ளப்படும் என்றும் மத்திய அரசு கூறுகிறது.

மேற்கண்ட அரசியல் தலைவர்களுக்கு நாட்டிலேயே மிக உயரிய இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. எக்ஸ் முதல் இசட் வரை தலைவர்களுக்கு இருக்கும் அச்சுறுத்தலுக்கு ஏற்ப பாதுகாப்பு வழங்கப்படும். இசட் பிளஸ் பாதுகாப்பில் ஒரு தலைவருக்கு 30 வீரர்கள் பாதுகாப்பு வழங்குவார்கள். ஒய் பிளஸ் பாதுகாப்பில் 11 வீரர்கள் பாதுகாப்பு அளிப்பார்கள்.

மத்திய அரசால் வழங்கப்படும் பாதுகாப்பைப் பெறும் முக்கிய பிரமுகர்கள் அதிகம் கொண்ட மாநிலமாக உத்தரப்பிரதேசம் விளங்குகிறது. 

நாட்டின் மிகவும் பணக்காரரான முகேஷ் அம்பானி, தனக்கு இசட் பிளஸ் பாதுகாப்பும், தனது மனைவி நீதா அம்பானிக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பும் பெற்றுள்ளார். இதற்கான செலவுத் தொகையையும் அவர் செலுத்தி வருகிறார் என்பது கூடுதல் தகவல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.