தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

காவிரி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைப்பு!

உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையியீட்டு வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :20 செப்டம்பர் 2017, 9:55 am

DIN

புதுதில்லி: உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையியீட்டு வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் கர்நாடகாவுக்கு இடையேயான காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் காவிரி நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது. ஆனால் இந்த இறுதித் தீர்ப்பில் உடன்பாடு இல்லாத காரணத்தால் வழக்கில் தொடர்புடைய மாநிலங்களான தமிழகம், கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய நான்கும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.

இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கடந்த ஜூலை 11-ஆம் துவங்கி தில்லி உச்ச நீதிமன்றத்தில் தினமும் நடைபெற்று வந்தது. இதில் சம்பந்தப்பட்ட நான்கு மாநிலங்களும் ஆஜராகி தங்கள் தரப்பு வாதத்தினை எடுத்து வைத்தன.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் தேதி குறிப்பிடாமல் உச்ச நீதின்றத்தால் தற்பொழுது தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.