டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

முல்லைப் பெரியாறு அணையில் நீர் கசிவு: மீண்டும் பழைய கதையை ஆரம்பித்த கேரளா

முல்லைப் பெரியாறு அணியின் மதகுகள் எண் 10 மற்றும் 11 ஆகியவற்றுக்கு இடையே நீர் கசிவு ஏற்பட்டுள்ளதாக கேரள நீர்வளத் துறை மீண்டும் பழைய கதையை ஆரம்பித்துள்ளது.

News image
Updated On :25 செப்டம்பர் 2017, 5:52 am

DIN


குமுளி: முல்லைப் பெரியாறு அணியின் மதகுகள் எண் 10 மற்றும் 11 ஆகியவற்றுக்கு இடையே நீர் கசிவு ஏற்பட்டுள்ளதாக கேரள நீர்வளத் துறை மீண்டும் பழைய கதையை ஆரம்பித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணையில் ஏற்பட்டிருக்கும் நீர் கசிவால், பாதுகாப்புப் பிரச்னை ஏற்பட்டிருப்பதாக கேரள நீர்வளத் துறை சார்பில் அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்த வேண்டிய நிலையில், நீர் கசிவு ஏற்பட்டிருப்பதாக கேரளா கூறியுள்ளது. அதோடு, அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

அதோடு, அணையைப் பராமரிக்க உச்ச நீதிமன்றம் நியமித்த அணை கண்காணிப்புக் குழு, மாதம்தோறும் அணையை ஆய்வு செய்து பராமரிப்புப் பணிகளை செய்ய வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் தமிழக அதிகாரிகள் போதிய ஒத்துழைப்பு தராததால் அணையை ஆய்வு செய்ய முடியாமல் போவதாகவும், கேரளாவில் இருந்து வெளியாகும் நாளிதழ் குற்றம்சாட்டியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.