பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

ஐந்து மாநில தேர்தலுக்கு அப்புறம்தான் மத்திய பட்ஜெட்: தேர்தல் ஆணையத்திடம் எதிர்க்கட்சிகள் முறையீடு!    

விரைவில் நடைபெற உள்ள ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் முடிந்த பின்பே மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளன.

Published On :

புதுதில்லி: விரைவில் நடைபெற உள்ள ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் முடிந்த பின்பே மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளன.

உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. அதன்படி பிப்ரவரி மாதம் 4-அம தேதி தொடங்கி மார்ச்மாதம் 8-ஆம் தேதி வரை தேர்தல்கள் நடைபெற உள்ளன.

இந்நிலையில் காங்கிரஸ் தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜவாதி கட்சி மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று தில்லியில் தலைமைத் தேர்தல்  ஆணையரைச்  சந்தித்து மனு ஒன்றைக் கொடுத்தன.  அதில் விரைவில் நடைபெற உள்ள ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் முடிந்த பின்பே மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

மனு கொடுத்து விட்டு வந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஒருங்கிணைந்த ஜனதா தள தலைவர் கே.சி.தியாகி பேசியதாவது:

காங்கிரஸ் தலைமையில் 12-க்கும் மேற்பட்ட எதிர்கட்சிகள் இன்று தேர்தல் ஆணையரைச் சந்தித்தோம்.ஐந்து மாநில சட்டசபை  தேர்தல்கள் தொடங்குவதற்கு மூன்று நாட்கள் முன்னதாக மத்திய பட்ஜெட்தாக்கல்  செய்யயப்பட இருப்பது பற்றிய எங்களது கருத்தை வெளிப்படுத்தினோம். இவ்வாறு செய்யப்படுவதன் மூலம் மத்திய அரசுக்கு ஒரு நியாயமற்ற சலுகை கிடைப்பதோடு தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கும் எதிரானதாக அமைகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.