சில மாநிலங்களில் ஏற்பட்டுள்ள திடீர் பணத்தட்டுப்பாடு குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமரிசித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
பொதுமக்கள் வங்கிகளில் இருந்து தங்களின் பணத்தை எடுத்துக்கொள்கின்றனர். ஆனால் வங்கி கணக்குகளில் பணம் செலுத்துவது குறைந்துவிட்டது. வங்கி அமைப்பின் மேல் ஏற்பட்ட அதிருப்திதான் இதற்கு முக்கிய காரணம். இதற்கு வங்கி ஊழல்களுக்குத்தான் நன்றி கூற வேண்டும்.
பணப் பதுக்கலை ஒழிப்பதாகக் கூறித்தான் மத்திய அரசு ரூ.500 மற்றும் ரூ.1,000 பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. ஆனால் தற்போது இதே அரசாங்கம்தான் ரூ.2,000 நோட்டுகள் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறது. இந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியதே பதுக்குவதற்குத்தான்.
இதனால் தற்போது பணமதிப்பிழப்பு பேய் மத்திய அரசையும், ஆர்பிஐ-யையும் ஆட்டிப்படைக்கத் தொடங்கிவிட்டது. இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு 17 மாதங்களாகியும் ஏடிஎம் இயந்திரங்கள் ஏன் இன்னும் நவீனப்படுத்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜகவின் தொகுதி மறுசீரமைப்பு மசோதா நாட்டை சிதறடிக்கும்: மம்தா பானா்ஜி எச்சரிக்கை

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

நாடு முழுவதும் ரூ.12,500 கோடியில் குழாய் வழி எரிவாயு வழித்தடம்: மத்திய அரசு திட்டம்

மியான்மா்: ஆங் சான் சூகிக்கு தண்டனை குறைப்பு; முன்னாள் அதிபா் விடுவிப்பு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


