கால்நடைத் தீவன ஊழல் வழக்குகளில் பிகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதாதளக் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் ராஞ்சியில் உள்ள பிர்ஸா முண்டா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் கோளாறு காரணமாக ஆர்.ஐ.எம்.எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர், அவரது உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் நீரிழிவு மற்றும் சிறுநீரக பிரச்னைகளால் அவதிப்பட்டு வருவதாகக் கூறி தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து அங்கு சிகிச்சை பெற்று வந்த லாலு பிரசாத் யாதவ் மீண்டும் ராஞ்சி மருத்துவமனைக்கு திங்கள்கிழமை மாற்றப்பட்டார்.

இதுகுறித்து லாலு பிரசாத் யாதவ் கூறியதாவது:
எந்த வசதியும் இல்லாத மருத்துவமனைக்கு என்னை மாற்றியுள்ளனர். வேண்டுமென்றே திட்டமிட்டு எனது உடல்நலத்தை அழிக்க முயற்சிக்கிறார்கள். இது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என்மீது எடுக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கை. இது ஒரு கடினமான காலம். இருப்பினும் இதை நான் எதிர்கொள்வேன் என்றார்.
#WATCH: Lalu Prasad Yadav argues with a Policeman at New Delhi Railway Station, says, 'This Policemen is asking me to step back, saying that the SP said so, is the SP my boss?' Lalu Prasad Yadav is leaving for Ranchi after being discharged from Delhi's AIIMS. pic.twitter.com/mscGhHWqfC
â ANI (@ANI) April 30, 2018

இந்நிலையில், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து லாலு பிராசத் யாதவ் மாற்றப்படும் போது அவர் அங்கிருந்த காவலர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகிகள் சிலர் மர்ம நபர்களால் தாக்கப்பட்டனர். இதுதொடர்பாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், லாலு பிரசாத் யாதவ் டிஸ்சார்ஜ் செய்யப்படும் போது மர்ம நபர்கள் எங்கள் நிர்வாகிகளை தாக்கியுள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தில்லி காவல்துறையில் புகார் அளித்துள்ளோம் என்றிருந்தது.

இதற்கிடையில், காங்கிரஸ் தலைவர் ராகுல், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு திங்கள்கிழமை காலை நேரில் சென்று லாலு பிராசத் யாதவ் உடன் பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காட்டு யானைகள் ஊருக்குள் வருவதைத் தடுக்க பாடந்தொரை பகுதியில் 2 கும்கிகள் வரவழைப்பு

விவசாயக் கண்மாய்களை ஆழப்படுத்த வேண்டும்! - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
மாணவா்கள் மீது தடியடி, துப்பாக்கிச்சூடு! நாடாளுமன்றத்தில் அமித் ஷா விளக்கமளிக்க வேண்டும்: காா்கே வலியுறுத்தல்

சேலம் வழியாக சென்னை - கொல்லம் இடையே சிறப்பு ரயில்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



